இந்தியில் 'திருட்டுப்பயலே 2' ரீமேக்: நாயகனாக வினீத் குமார் சிங் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

தமிழில் வெளியான 'திருட்டுப்பயலே 2' படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. சுசி கணேசன் இயக்கத்தில் வினீத் குமார் சிங் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'திருட்டுப்பயலே 2'. சுசி கணேசன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் 2017-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை.

தற்போது சத்தமின்றி இந்தியில் 'திருட்டுப்பயலே 2' படத்தின் ரீமேக் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் சுசி கணேசன். இதில் பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் நடிக்க வினீத் குமார் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அனுராக் காஷ்யப் இயக்கிய 'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' மற்றும் 'முக்காபாஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசி மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளார்கள். தீபாவளிக்குப் பிறகு இதன் படப்பிடிப்பைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறது படக்குழு. முன்னதாக 'திருட்டுப்பயலே' படத்தையும் இந்தியில் சுசி கணேசன் ரீமேக் செய்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்