கோத்ரா ரயில் எரிப்பு கதையில் ராஷி கண்ணா

By செய்திப்பிரிவு

மும்பை: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2002-ம் ஆண்டு ஒரு பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மதக்கலவரம் வெடித்தது. இதை மையமாக வைத்து இந்தியில் சில திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இப்போது ‘தி சபர்மதி ரிப்போர்ட்’என்ற பெயரில் புதிய படம் உருவாகியுள்ளது.

இதை ரஞ்சன் சண்டேல் இயக்கியுள்ளார். இதில் ‘12-த் ஃபெயில்’ படம் மூலம் கவனிக்கப்பட்ட விக்ராந்த் மாசே நாயகனாக நடித்துள்ளார். ராஷி கண்ணா நாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழில், இமைக்கா நொடிகள், அடங்கமறு, அரண்மனை 3, சர்தார் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மே மாதம் 3-ம் தேதி வெளியாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 mins ago

தமிழகம்

8 mins ago

இந்தியா

19 mins ago

சினிமா

27 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

49 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்