மும்பை: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2002-ம் ஆண்டு ஒரு பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மதக்கலவரம் வெடித்தது. இதை மையமாக வைத்து இந்தியில் சில திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இப்போது ‘தி சபர்மதி ரிப்போர்ட்’என்ற பெயரில் புதிய படம் உருவாகியுள்ளது.
இதை ரஞ்சன் சண்டேல் இயக்கியுள்ளார். இதில் ‘12-த் ஃபெயில்’ படம் மூலம் கவனிக்கப்பட்ட விக்ராந்த் மாசே நாயகனாக நடித்துள்ளார். ராஷி கண்ணா நாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழில், இமைக்கா நொடிகள், அடங்கமறு, அரண்மனை 3, சர்தார் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மே மாதம் 3-ம் தேதி வெளியாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
2 mins ago
தமிழகம்
8 mins ago
இந்தியா
19 mins ago
சினிமா
27 mins ago
இந்தியா
32 mins ago
இந்தியா
49 mins ago
உலகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago