திருவள்ளூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் 2-வது வெள்ளிக்கிழமை மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், 4-வது வெள்ளிக்கிழமையான நாளை(24-ம் தேதி) காலை 10 மணியளவில் இம்முகாம் நடைபெற உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு 10-ம்வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, ஐடிஐ படித்தவர்களை தேர்வு செய்ய உள்ளன.

25-ல் காஞ்சிபுரம்

இதேபோல் காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 25-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 18 வயதில் இருந்து 35 வயது வரையிலான உள்ள வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் ஜூன் 25-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பங்கேற்கலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-27237124என்ற தொலைபேசி எணி தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்