மார்ச் 24-ல் குரூப் 1 நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி

By செய்திப்பிரிவு

சென்னை: சேவா பாரதியின் பாரதி பயிலகம் மற்றும் பி.எல்.ராஜ் ஐஏஎஸ் அகடமி இணைந்து குரூப் 1 நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சியை வரும் மார்ச் 24ம் தேதி நடத்துவதாக, பாரதி பயிலகம் - சேவாபாரதியின் தமிழ்நாடு இயக்குனர் தன்ராஜ் உமாபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்: இந்த ஆண்டு தமிழக அரசு நடத்திய குருப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்விற்குச் செல்ல இருக்கும் மாணவர்களுக்கு மனவலிமை மற்றும் அறிவுக்கூர்மையை உயர்த்திக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு. வருகின்ற மார்ச் 24 ஞாயிறு அன்று காலை 10 மணியளவில், IAS, IPS, IRS போன்ற அரசின் உயர் பதவிகளில் பணியாற்றும் மற்றும் பணியாற்றி ஓய்வுபெற்ற, அரசுத் துறைகளில் பல்லாண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு இப்பயிற்சியினை அளிக்க இருக்கிறோம். மேலும் நேர்முகத்தேர்வை, பதற்றமின்றி சந்தித்து வெற்றி பெற மனநல நிபுணரின் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வுக்கான இலவசப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற contactbharathi57@gmail.com என்ற மின்னஞ்சலில் பதிவு செய்யக் கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு 9003242208 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்