9 பொதுத்துறை வங்கிகளுக்கு செயல் இயக்குநர்கள் நியமனத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பணியாளர் நியமனம் மற்றும் பயிற்சித்துறை (டிஓபிடி) 9 செயல் இயக்குநர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன்படி சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குநராக பஜ்ரங் சிங் ஷெகாவத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது இதே வங்கியின் பொது மேலாளராக உள்ளார்.
விஜயா வங்கியில் பொது மேலாளராக உள்ள கோவிந்த் என் டோங்ரே தற்போது பஞ்சாப் சிந்த் வங்கியின் செயல் இயக்குநராகவும், அலாகாபாத் வங்கியின் பொது மேலாளராக உள்ள அஜய் குமார் ஸ்ரீவாஸ்தவா தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநராகவும், இதேபோல அலகாபாத் வங்கியின் மற்றொரு பொது மேலாளரான எம். வெங்கட ராவ் தற்போது கனரா வங்கியின் செயல் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளராக உள்ள குல் பூஷண் ஜெயின் தற்போது ஆந்திரா வங்கியின் செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொது மேலாளர் ராஜேஷ் குமார் யதுவன்ஷி தற்போது தேனா வங்கியின் செயல் இயக்குநராகவும், பாங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளராக உள்ள சைதன்யா காயத்ரி சிந்தபள்ளி தற்போது பாங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியன் வங்கியின் பொது மேலாளரான எஸ். கிருஷ்ணன் தற்போது சிண்டிகேட் வங்கியின் செயல் இயக்குநராக பொறுப்பேற்க உள்ளார். அலாகாபாத் வங்கியின் பொது மேலாளரான லிங்கம் வெங்கட பிரபாகர் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குநராக பொறுப்பேற்க உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
சினிமா
35 mins ago
வலைஞர் பக்கம்
1 hour ago
கல்வி
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
12 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago