மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே நிறைவடைந்தது. சென்செக்ஸ் 147 புள்ளிகள் (0.25 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 59,958 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 37 புள்ளிகள் (0.21 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,858 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் சிறிது ஏற்றத்துடன் தொடங்கியபோதும், விரைவில் சரிவை நோக்கிச் சென்றது. காலை 09:44 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 2.90 புள்ளிகள் உயர்வுடன் 60,108.40 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 8.30 புள்ளிகள் உயர்வுடன் 17,904.00 ஆக இருந்தது.
உலக அளவில் சாதகமான சந்தை சூழல் நிலவிய நிலையில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம் பின்னர் சரிவை நோக்கிச் சென்றது. அமெரிக்காவின் பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சியுடனேயே நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகம் முழுவதும் நிலவிய மந்தநிலை காரணமாக நிஃப்டி 100 புள்ளிகள் வரை குறைந்து 17,761 வரைச் சென்றது. சென்செக்ஸ் 450 புள்ளிகள் வரை குறைந்து, 59,632 வரைச் சென்றது.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 147.47 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,958.03 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 37.50 புள்ளிகள் சரிவடைந்து 17,858.20 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், இன்போசிஸ், நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், எம் அண்ட் எம், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, டிசிஎஸ், விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் உயர்ந்திருந்தன. என்டிபிடி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்டஸ்இன்ட் பேங்க், டெக் மகேந்திரா. ஐடிசி, டாடா ஸ்டீல்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், கோடாக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
தொழில்நுட்பம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
கல்வி
7 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
தமிழகம்
7 hours ago