மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்கிழமை) வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. வர்த்தக தொடக்கத்தின் போது சென்செக்ஸ் 94 புள்ளிகள் சரிந்து 61,074 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 34 புள்ளிகள் சரிந்து 18,163 ஆக இருந்தது.
வாரத்தின் இரண்டாம் நாளான இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 09:39 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 32.56 புள்ளிகள் சரிவுடன் 61,135.23 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 24.10 புள்ளிகள் சரிவடைந்து 18,173.35 ஆக இருந்தது.
உலக அளவில் நிலவும் பாதகமான சூழல், ஆசிய-பசிபிக் பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், டிசிஎஸ், கோட்டாக் மகேந்திரா பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், இன்போசிஸ், விப்ரோ, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டைட்டன் கம்பெனி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் சரிவில் இருந்தன.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
4 hours ago
இணைப்பிதழ்கள்
4 hours ago
இணைப்பிதழ்கள்
4 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
ஆன்மிகம்
1 min ago
விளையாட்டு
6 mins ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago