பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு டிசம்பர் 30-க்கு பிறகும் தொடரும்

By செய்திப்பிரிவு

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. 50 நாட்களுக்குள் நிலைமை சரியாகவிடும் என மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகும் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தையின் தேவைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியால் புதிய நோட்டு களை அச்சடிக்க முடியவில்லை. பெரும்பாலான வங்கியாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு கள் தொடரும் என்றே தெரிவித் திருக்கிறார்கள். ஒரு வாரத்துக்கு அதிகபட்சம் 24,000 ரூபாய் பணம் எடுக்கலாம். ஆனால் சில வங்கி களில் இந்தத் தொகையை கூட விநியோகம் செய்ய முடியாத சூழல் இருக்கிறது.

இந்த நிலையில் தற்போதைய விதிமுறைகளை தளர்த்தினால் கூட வங்கிகளால் கூடுதல் தொகையை விநியோகம் செய்ய முடியாத சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகும். அதனால் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு முழுமையாக விலக்கிக்கொள்ள வாய்ப்பு இல்லை. பணப்புழக்கம் அதிகரித்தால்தான் அது குறித்த முடிவு எடுக்கப்படும் என பொதுத்துறை வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களையே சமா ளிக்க முடியாத சூழல் இருக்கும் போது, நடப்பு கணக்கு மற்றும் பெரிய கார்ப்பரேட் கணக்குகளை எப்படி சமாளிக்க முடியும். இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த் தப்படும் என்றும் அவர் கூறினார்.

வங்கிகளுக்கு வரும் பணம் அதிகரிக்காத வரையில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு நீக்கப் பட வாய்ப்பு இல்லை என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, வங்கிகளில் இருந்து ஒரு வாரத்தில் 24,000 ரூபாய் எடுக்க முடியும். ஏடிஎம் மையங்களில் இருந்து ஒரு நாளைக்கு 2,500 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடு எப்போது விலக்கப்படும் என்று மத்திய அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

முன்னதாக டிசம்பர் 30-ம் தேதி பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு கள் குறித்து மத்திய அரசு பரி சீலனை செய்யும் என நிதி செயலாளர் அசோக் லவாசா கூறியிருந்தார்.

பணம் எடுப்பதற்கான கட்டுப் பாடு உடனடியாக நீக்குவதற்கான வாய்ப்பு குறைவு என வங்கி பணியாளர்கள் சங்கமும் தெரிவித் திருக்கிறது. பணம் வங்கிகளுக்கு எவ்வளவு வருகிறது என்பது அனை வருக்கும் தெரியும். அதனால் இப் போதைக்கு கட்டுப்பாடுகள் நீங்க வாய்ப்பு இல்லை என அனைத் திந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹர்விந்தர் சிங் கூறினார்.

பணமதிப்பு நீக்கம் செய்யப் பட்டதால் ரூ.15.4 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் மதிப்பிழந்தன. இதில் ரூ.12.4 லட்சம் கோடி நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.5.92 லட்சம் கோடி புதிய நோட்டுகளை ( நவம்பர் 9 முதல் டிசம்பர் 19 வரை) ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்