ரத்தன் டாடாவுக்கும் சைரஸ் மிஸ்திரிக்கும் இடையேயான பிரச்சினைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் டாடா குழும நிறு வனங்களில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தங்களுடைய முத லீட்டை உயர்த்தி இருக்கின்றன. நவம்பர் மாத முதலீடு விவரங்களில் இவை தெரிய வந்துள்ளன.
டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், டாடா பவர் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களில் மியூச் சுவல் பண்ட் நிறுவனங்களின் முதலீடு உயர்ந்துள்ளதாக மார்னிங்ஸ்டார் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மாறாக இந்தியன் ஓட்டல்ஸ், டைட்டன், டாடா குளோபல் பிவரேஜஸ் மற்றும் டாடா டெலி சர்வீசஸ் மகாராஷ்டிரா ஆகிய நிறுவனங்களின் முதலீடு குறித்த தகவல் கிடைக்கவில்லை.
கடந்த மாதம் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 1.38 கோடி பங்கு களை வாங்கி இருக்கின்றன. முந்தைய மாதத்தை விட இந்த மாதம் மியூச்சுவல் பண்ட் நிறு வனங்களின் பங்கு 11.33 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
இதேபோல டாடா பவர் நிறு வனத்தில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களின் பங்கு 8.36 சதவீதமும், டாடா ஸ்டீல் நிறுவனத்தில் 8.17 சதவீதம் உயர்ந்திருக்கின்றன. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து 24-ம் தேதி நீக்கப்பட்டார். ஆனால் குழும நிறுவனங்களில் இருந்து அவரை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாடா குழும நிறுவனங்களில் மியூச்சுவல் பண்ட் முதலீடு உயர்ந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 mins ago
இந்தியா
18 mins ago
சினிமா
1 hour ago
கல்வி
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
தமிழகம்
10 hours ago
சுற்றுலா
11 hours ago