புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.9 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக, நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த மதிப்பீட்டை, கடந்தஅக்டோபர் மாதத்தில் 6.5 சதவீதமாக குறைத்தது. சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறியது.
இந்நிலையில், தற்போது இந்தியாவின் ஜிடிபி மதிப்பீட்டை 6.9 சதவீதமாக உயர்த்தி உள்ளது.
இது குறித்து உலக வங்கி கூறுகையில், “நடப்பு நிதி ஆண்டுஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.3 சதவீதமாக உள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வளர்ச்சிஆகும். தற்சமயம் உலக அளவில்பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதாரம் இந்த நெருக்கடி மத்தியிலும் மேம்பட்டு பயணிக்கிறது. கொள்கைரீதியாக கொண்டுவரப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள் இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.
அதேபோல், வெளிநாடுகளுட னான இந்தியாவின் வர்த்தக் உறவு கடந்த பத்தாண்டுகளில் மேம்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
கல்வி
10 hours ago
தமிழகம்
10 hours ago
கல்வி
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
சினிமா
11 hours ago