வர்த்தகர்கள் ரூ.2 லட்சத்துக்கும் மேல் ரொக்கத்தின் மூலமாக வர்த்தகம் செய்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.
வருமான வரி விதிகள் 1962-ல் விதி 114-இ குறித்து பல்வேறு சந் தேகங்கள் வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரே பரிவர்த்தனையில் 2 லட்ச ரூபாய் மேல் வர்த்தகம் செய்தால் அந்த விவரத்தை வருமான வரித்துறைக்கு சமர்பிக்க வேண்டுமா என்பது போன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இந்த சந்தேகங்களை தெளிவு படுத்தும் வகையில் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் (சிபிடிடி) அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளது. ``விதி 114, உட்பிரிவு 3-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பரிவர்த்தனைகள் அறிக் கையை சமர்பிக்கும் போது ஒரே பரிவர்த்தனையில் 2 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் செய்தால் அதற்குரிய ரசீதை சமர்பிக்க வேண்டும்’’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
8 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
28 mins ago
இந்தியா
32 mins ago
வாழ்வியல்
42 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago