செல்லப் பிராணிகளுடன் பயணம் செய்யலாம் - ஆகாஸா ஏர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆகாஸா ஏர் கடந்த ஆகஸ்ட் 7-ல் பயணிகள் விமான சேவையை தொடங்கியது. சேவை தொடங்கி 60 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பெல்ஸன் கவுட்டின்ஹோ செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

விமானப் பயணத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவங்களை வழங்க வேண்டும் என்பதில் நிறுவனம் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் எங்களது விமானங்களில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான பூனை, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்லலாம். இந்த பயணத்துக்கான முன்பதிவு அக்டோபர் 15-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

ஒரு பயணிக்கு ஒரு செல்லப்பிராணி என்ற வகையில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும். செல்லப்பிராணியின் எடை 7 கிலோ வரை இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிறுவனத்துக்கு சொந்தமாக 6 விமானங்கள் உள்ளன. இதனை நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 18 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபே தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்