ட்விட்டர் இந்தியாவின் தலைவர் ரிஷி ஜேட்லி ராஜினாமா செய்திருக்கிறார். நான்கு வருடங்கள் இந்த பதவியில் இருந்தவர் இப்போது ராஜினாமா செய்திருக்கிறார். புதிய வாய்ப்புகளுக்காக வெளியேறு வதாக ரிஷி கூறியிருக்கிறார்.
இது குறித்து ட்விட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர் பாளர் கூறும்போது, கடந்த 4 வருடங்களாக ரிஷியின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித் துக் கொள்கிறோம், இந்தியாவில் ட்விட்டர் நிறுவன வளர்ச்சியில் அவரின் பங்களிப்பு முக்கிய மானது என்று குறிப்பிட்டுள்ளார். நவம்பர் மாத இறுதி வரை அவர் பணியாற்றுவார் என்றும் அதன் பிறகு அமெரிக்காவுக்கு திரும்புகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தில் இணைந்தவர். ட்விட்டர் நிறுவனத்தை விற்கும் முயற்சி தோல்வியடைந்து, பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு வரும் சூழலில் இவரது ராஜினாமா முக்கியத்துவம் பெறுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
இந்தியா
25 mins ago
தமிழகம்
48 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
3 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
இந்தியா
13 hours ago