அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பார்சூன் பத்திரிகை, சிறந்த 50 தொழில்துறை தலைவர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதில் ஹெச்டிஎப்சி வங்கியின் ஆதித்யா பூரி 36-வது இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் இருக்கும் ஒரே இந்தியர் இவர் மட்டுமே. தவிர இந்திய வம்சா வளியைச் சேர்ந்தவரும், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான சத்ய நாதெள்ளா ஐந்தாவது இடத்திலும், ஏஓ ஸ்மித் நிறுவனத்தின் அஜிதா ராஜேந்திரா 34-வது இடத்திலும் மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் அஜய் பங்கா 40-வது இடத்திலும் இருக்கின்றனர்.
பேஸ்புக் நிறுவனத்தின் நிறு வனர் மார்க் ஜூகர்பெர்க் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியின் தலைவராக 1994-ம் ஆண்டு முதல் ஆதித்யா பூரி இருக் கிறார். 69 வயதாகும் பூரி இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் வங்கித் தலைவராவார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
34 mins ago
ஜோதிடம்
41 mins ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
7 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
கல்வி
9 hours ago