மூன்று மாதங்களில் 3 கோடியே 30 லட்சம் ஸ்மார்ட்போன்கள் இந்தியச் சந்தையில் புழக்கத்துக்கு வந்துள்ளன. ஜூலை முதல் செப் டம்பர் வரையான காலத்தில் மிக அதிக அளவில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டு இந்தியச் சந் தைக்கு வந்துள்ளதாக ஐடிசி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு இதே காலத் தில் மொத்தம் 2 கோடியே 91 லட்சம் அளவுக்குத்தான் ஸ்மார்ட் போன்கள் புழக்கத்துக்கு வந்தன. தற்போது முதல் முறையாக 3 கோடி அளவை தாண்டியுள்ளதாக ஐடிசி தெரிவிக்கிறது.
பண்டிகைக் காலங்கள் அதிகம் வந்ததால் இந்த சீசனில் அதிக அளவில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர ஆன்லைன் நிறுவனங்கள் அதிக அளவில் பண்டிகைக் கால சிறப்புத் தள்ளுபடி விற்பனை அறிவித்ததால் விற்பனை அதிகரித்து ஸ்மார்ட்போன் உற்பத்தி அதிகரித்ததாக ஐடிசி குறிப்பிட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களில் சாம்சங் 23%, லெனோவா மற்றும் மோட்ட ரோலா 9.6%, மைக்ரோமேக்ஸ் 7.5% அளவுக்கு சந்தையைப் பிடித்துள்ளன. ஜியோமி 7.4%, ரிலையன்ஸ் ஜியோ 7% சதவீத சந்தையைப் பிடித்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஜியோமி ஸ்மார்ட்போன் விற்பனை இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.
ஆன்லைனில் ஸ்மார்ட்போன் விற்பனை 31 சதவீதம் அதிகரித் துள்ளதாக அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
விளையாட்டு
10 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
விளையாட்டு
13 hours ago