தங்கம் பவுனுக்கு ரூ.360 உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒருகிராம் ரூ.45 அதிகரித்து ரூ.4,850-க்கும், பவுனுக்கு ரூ.360 அதிகரித்துரூ.38,800-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் இதன் விலைபவுன் ரூ.38,440 ஆகவும், கிராம்ரூ.4,805 ஆகவும் இருந்தது.

இதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 60 பைசா உயர்ந்து,ஒரு கிராம் ரூ.61.50-க்கும், ஒரு கிலோ ரூ.600 அதிகரித்து ரூ.61,500-க்கும் விற்கப்பட்டது.

தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை மேலும் உயரும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்