சென்னை: தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர்.
இதனால் இந்தியாவிலும் அதிகமான அளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுவதால் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் சரிந்து வருகிறது.
இதனால் தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மீதான சுங்க வரி 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்த்தப்பட்டதால் கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து ரூ.4,696-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.37,568-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.40,784-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை 40 பைசா குறைந்து ரூ.61.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.61,200 ஆக உள்ளது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
21 mins ago
விளையாட்டு
26 mins ago
சுற்றுச்சூழல்
30 mins ago
இந்தியா
41 mins ago
சினிமா
48 mins ago
இந்தியா
44 mins ago
விளையாட்டு
52 mins ago
இந்தியா
34 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago