சென்னை: தங்கம் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. 9 நாட்களுக்குப் பிறகு ஒரு கிராம் மீண்டும் 4,800 ரூபாயை கடந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. தங்கம் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50உயர்ந்து ரூ.4,810-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.400உயர்ந்து ரூ.38,480-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41672-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராம் ஒன்று விலை ரூ.1.50 உயர்ந்து ரூ.68.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.68,500 ஆக விற்பனையாகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
விளையாட்டு
1 hour ago
இலக்கியம்
5 hours ago
இலக்கியம்
5 hours ago
இந்தியா
1 hour ago
இலக்கியம்
5 hours ago
இலக்கியம்
5 hours ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
வணிகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago