ஒரு காலத்தில் வசதியாக பார்க்கப்பட்ட விஷயங்கள் எல்லாம் இன்றைய வாழ்க்கைச் சூழலில் அன்றாடத் தேவைகளாக மாறிவிட்டன. ஆடம்பரமாக இருந்த பைக், கார் இன்று தேவையாக மாறியிருக்கின்றன. வீடுகளும் அதன் உள்கட்டமைப்புகளும் வெகுவாக மாறியிருக்கின்றன. அந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வங்கிக் கடன்கள் மிகவும் கைகொடுத்து உதவுகின்றன. இன்று ஒரு சராசரி குடும்பத்தின் மாதாந்திர செலவு பட்டியலில் வங்கி இஎம்ஐ -யும் இடம் பெறும் அளவிற்கு வாழ்க்கை நிலை மாறியிருக்கிறது. ஆனாலும் வங்கிகளில் கடன் பெறுவது எப்படி என்ற குழப்பம் இன்னுமும் பலருக்கும் இருக்கிறது. வங்கிகள் யாருக்கெல்லாம், என்னென்ன காரணங்களுக்காக கடன் வழங்குகின்றன என்றும் வங்கிக் கடன்களின் வகைகள் குறித்தும் விரிவாக விளக்குகிறார் எழுத்தாளர், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொது மேலாளர் "குறள் இனிது" சோம. வீரப்பன்
டேர்ம் லோன் (Term Loan): குறிப்பிட்ட காலத்திற்கு வாடிக்கையாளர் ஒருவருக்கு கொடுக்கும் கடனுக்கு டேர்ம் லோன் என்று பெயர். அதாவது வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடன்கள் 10,15, 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. வாகனக்கடனும் 3 முதல் 7 ஆண்டுகளுக்கு வழங்கப்படும், தொழில் தொடங்குவதற்கு இயந்திரங்கள் வாங்க வங்கிகள் வழங்கும் கடன் டேர்ம் லோன் எனப்படும். சுருக்கமாக சொல்லவதானால் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்த ஒப்பந்தம் செய்து கொண்டு வங்கிகள் வழங்கும் கடன் டேர்ம் லோன் எனப்படும். சாதாரணமாக உங்கள் கணக்கு சரியாக சென்று கொண்டிருந்தால் வங்கி தான் வழங்கிய கடன் தொகையை தவணைகளாக திரும்ப பெற்றுக் கொள்ளும். டேர்ம் லோன் வழங்கப்படும் போதே எவ்வளவு காலத்திற்கு எவ்வளவு பணம் திருப்பிச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கும். இந்த தவணைகள் உங்களின் பண புழக்கம், எதிர்கால வருமானம், லாபம் ஆகியவைகளை கணக்கிட்டு தவணைத் தொகை தீர்மானிக்கப்படும். டேர்ம் லோனில் ரீ பேமண்ட ஹாலிடே என்ற ஒன்று உண்டு அதாவது வாடிக்கையாளர் கடன் வாங்கிய அடுத்த மாதமே திருப்பிச் செலுத்த வேண்டியது இல்லை. தொழிலுக்காக கடன் வாங்கியிருந்தால் அது லாபம் தரும் வரையிலும், வீடு கட்டிக் கொண்டிருக்கும் போது வீட்டுக்கடன் வாங்கி இருந்தால் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு அங்கு குடியேறிய பின்னர் தவணைத் தொகையை கட்ட ஆரம்பிக்கலாம். டேர்ம் லோனைப் பொறுத்த வரையில் உங்களுக்கு லாபம் எப்போது வரத் தொடங்கும், எப்போது உங்களால் பணத்தை திருப்பிச் செலுத்த முடியும் என்பதை கணக்கில் கொண்டு முதல் தவணை தீர்மானிக்கப்படும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
வணிகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தொழில்நுட்பம்
5 hours ago
சினிமா
7 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
7 hours ago
க்ரைம்
8 hours ago