ஃபேஸ்புக் இணையதளத்தில் உள்ள தவறைக் கண்டுபிடித்தவர் களுக்கு இதுவரை 4.84 கோடி ரூபாயை அந்த நிறுவனம் வழங்கி இருக்கிறது. இதுவரை இதற்காக அதிகம் செலவிட்டது இந்த நிறுவனம்தான்.
`பக் பவுன்டி’ என்னும் திட்டத்தை ஃபேஸ்புக் நடத்தி வருகிறது. இதில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மென்பொருள் உள்ளிட்ட தவறுகளைக் கண்டு பிடிக்க பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பல தவறுகளைக் கண்டுபிடித்த இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு 4.84 கோடி ரூபாய் அளவுக்கு வழங்கியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.
இந்தியாவில் 14.2 கோடி வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இந்த நிறுவனத்தின் `பக் பவுன்டி’ திட்டத்தில் 127 நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்தத் திட்டம் தொடங்கப் பட்டதில் இருந்து 800-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆராய்ச்சி யாளர்களுக்கு 43 லட்சம் டாலர் செலவிடப்பட்டுள்ளது.
இந்தியா, எகிப்து மற்றும் டிரினாட் டொபாகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அதிக தொகை செலவிடப் பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பயன்படுத்து பவர்களை பாதுகாப்பதற்காக தான் இந்த `பக் பவுன்டி’ திட்டம் கொண்டுவரப்பட்டது என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
31 mins ago
சினிமா
16 mins ago
உலகம்
38 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
41 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago