தவறைக் கண்டுபிடித்தவர்களுக்கு ரூ.4.84 கோடி வழங்கியது ஃபேஸ்புக்

By செய்திப்பிரிவு

ஃபேஸ்புக் இணையதளத்தில் உள்ள தவறைக் கண்டுபிடித்தவர் களுக்கு இதுவரை 4.84 கோடி ரூபாயை அந்த நிறுவனம் வழங்கி இருக்கிறது. இதுவரை இதற்காக அதிகம் செலவிட்டது இந்த நிறுவனம்தான்.

`பக் பவுன்டி’ என்னும் திட்டத்தை ஃபேஸ்புக் நடத்தி வருகிறது. இதில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மென்பொருள் உள்ளிட்ட தவறுகளைக் கண்டு பிடிக்க பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பல தவறுகளைக் கண்டுபிடித்த இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு 4.84 கோடி ரூபாய் அளவுக்கு வழங்கியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

இந்தியாவில் 14.2 கோடி வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இந்த நிறுவனத்தின் `பக் பவுன்டி’ திட்டத்தில் 127 நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்தத் திட்டம் தொடங்கப் பட்டதில் இருந்து 800-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆராய்ச்சி யாளர்களுக்கு 43 லட்சம் டாலர் செலவிடப்பட்டுள்ளது.

இந்தியா, எகிப்து மற்றும் டிரினாட் டொபாகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அதிக தொகை செலவிடப் பட்டுள்ளது.

ஃபேஸ்புக் பயன்படுத்து பவர்களை பாதுகாப்பதற்காக தான் இந்த `பக் பவுன்டி’ திட்டம் கொண்டுவரப்பட்டது என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

31 mins ago

சினிமா

16 mins ago

உலகம்

38 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

41 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்