மத்திய அரசு 100 ‘ஸ்மார்ட் சிட்டி’களை உருவாக்க திட்டமிட் டிருக்கிறது. இதற்கு 10 லட்சம் கோடி ரூபாய் (15,000 கோடி டாலர்) தேவைப்படும் என்று டெலோய்டி நிறுவனம் கணித்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த முதலீடு தேவைப்படும். இதில் தனியார் துறையின் பங்களிப்பு முதலீடு கணிசமாக இருக்கும்.
இந்த நிறுவனத்தின் கணிப்புப்படி தனியார் துறை முதலீடு 8.1 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த நகரங்களில் அதிகமாக முதலீடு செய்யும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
உதாரணத்துக்கு ரிலையன்ஸ் ஜியோ இந்த ஆண்டு 50 நகரங் களுக்கு வைபை சேவையை வழங்க திட்டமிட்டிருக்கிறது. அதேபோல பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன.
ஃபேஸ்புக் நிறுவனம் பிஎஸ்என்எல் உடன் சேர்ந்து 100 கிராம பகுதிகளில் வைபை சேவை வழங்க திட்டமிட்டிருக்கிறது. அதேபோல கூகுள் நிறுவனம் 400 ரயில் நிலையங்களில் இந்த சேவையை வழங்குவதாக தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில் அடுத்த 10-15 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி மையமாக இந்த நகரங்கள் இருக்கும் என்று டெலோய்டி தெரிவித்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
2 hours ago