ஆர்செலர் மிட்டலின் நஷ்டம் ரூ.53,168 கோடி

By செய்திப்பிரிவு

மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தின் 2015-ம் ஆண்டின் நிகர நஷ்டம் 53,168 கோடி ரூபாய் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சுரங்கத் தொழிலில் உள்ள அடிப்படை கட்டணங்களுக்கு ஒதுக்கிய தொகை அதிகமாக இருந்ததால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் 2014-ம் ஆண்டு நிகர நஷ்டம் 12,594 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நஷ்டம் குறித்து ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மக்ஸ்மி மிட்டல் கூறுகையில், ``2015ம் ஆண்டு ஸ்டீல் மற்றும் சுரங்கத் தொழில் துறைக்கும் மிக கடினமாக இருந்தது. சீனாவில் இந்த வருடம் அதிக உற்பத்தி திறன் இருந்ததால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இருப்பினும் இந்த விலை வீழ்ச்சி சூழலுக்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

ஆர்செலர் மிட்டல் நிறுவனம் கடனை குறைப்பதற்காக ரூ.20,294 கோடி புதிய முதலீடு திரட்டும் திட்டத்தை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் ஸ்டீல் மற்றும் சுரங்கத் தொழில் மந்தமான சூழ்நிலை நிலவுவதாலும் கடனைக் குறைப்பதற்காகவும் இந்த முடிவை ஆர்செலர் மிட்டல் எடுத்துள்ளது.

2016-ம் ஆண்டிலும் நிறுவனத்தின் லாபம் சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டின் இந்நிறுவனத்தின் நிகர கடன் 1,06,171 கோடி ரூபாயாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்