சிடிஎஸ்எல் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்கியது எல்ஐசி

By செய்திப்பிரிவு

பொதுத்துறை காப்பீட்டு நிறுவ னமான எல்ஐசி, சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (சிடிஎஸ்எல்) நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்கி யுள்ளது. இதன் மதிப்பு 82.5 கோடி ரூபாயாகும். இதன் மூலம் சிடிஎஸ்எல் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 825 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பிஎஸ்இ 54.20 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.

டெபாசிட்டரி நிறுவனங்களில் பங்குச் சந்தை எக்ஸ்சேஞ்ச்கள் 24 சதவீதத்துக்கு மேலான பங்கு களை வைத்துக்கொள்ள கூடாது என கடந்த ஏப்ரல் 2012-ல் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி உத்தர விட்டிருந்தது. அதற்கு மூன்று வருட கால அவகாசம் கொடுக்கப் பட்டிருந்தது.

முன்னதாக கனரா வங்கியும் இந்த பங்குகளை வாங்கும் போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. எல்ஐசி தவிர, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, ஸ்டாண்டர்ட் சார்டட் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா மற்றும் கொல்கத்தா பங்குச் சந்தை ஆகியவையும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய் துள்ளன.

சிடிஎஸ்எல் நிறுவனத்தில் 1.02 கோடி டீமேட் கணக்குகள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்