காரீப் கொள்முதல்: 85.71 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,11,700.70 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை

By செய்திப்பிரிவு

காரீப் சந்தை பருவத்தில், காரீப் பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.

தமிழகம், பஞ்சாப் உட்பட நெல் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் நெல் கொள்முதல் சுமுகமாக நடந்து வருகிறது. கடந்த 27ம் தேதி வரை, 591.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்ட கொள்முதலை விட 19.20 சதவீதம் அதிகம்.

இதற்காக சுமார் 85.71 லட்சம் விவசாயிகள், ரூ.1,11,700.70 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றுள்ளனர்.

மாநிலங்கள் வேண்டுகோள்படி, 51.92 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27ம் தேதி வரை, 3,02,498.56 மெட்ரிக் டன் பாசிப் பயறு, உளுந்து, துவரை, நிலக்கடலை, சோயாபீன்ஸ் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்துள்ளது. 5089 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 27ம் தேதி வரை, 18,25,805 விவசாயிகள் 88,90,237 பருத்தி கட்டுகள், ரூ.25,974.01 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்