நோக்கியா நிறுவனத்துக்கு வரு மான வரித்துறை புதிதாக வரி பாக்கிக்கான நோட்டீஸை அனுப்பியுள்ளது. இத்தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
நோக்கியா நிறுவனம் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொடர் பான மேல் முறையீடு வழக்கு, வரி மேல்முறையீட்டு ஆணையத்தின் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் புதிதாக அதாவது ஏற்கெனவே வரி நிலுவைத் தொகைக்கான வழக்கு தவிர்த்த பிற ஆண்டுகளில் செலுத்த வேண்டிய வரி பாக்கிக்காக இப் போது புதிதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இப்போது எவ்வளவு வரி நிலுவை என்பது குறித்தோ அல்லது நோக்கியா நிறுவனம் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தோ வருமான வரித்துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
2006-ம் ஆண்டிலிருந்து வரி செலுத்தவில்லை என்பதற்காக ரூ. 2,000 கோடி வரி பாக்கிக்கான நோட் டீஸை வரித்துறையினர் 2013-ம் ஆண்டு அனுப்பினர். வரி சிக்கலில் உள்ள சென்னையை அடுத்த பெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையை மட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கவில்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 mins ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
31 mins ago
கல்வி
46 mins ago
சுற்றுச்சூழல்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சுற்றுச்சூழல்
1 hour ago
சினிமா
3 hours ago