இந்தியாவில் 3 மாதங்களில் $28.1 பில்லியன் நேரடி அந்நிய முதலீடு வருகை

By செய்திப்பிரிவு

ஜூலை-செப்டம்பர் காலாண்டில் $28.1 பில்லியன் நேரடி அந்நிய முதலீடு நாட்டுக்குள் வந்தது.

2020-21-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) $28,102 மில்லியன் நேரடி அந்நிய முதலீடு நாட்டுக்குள் வந்துள்ளது.

இதில் நேரடி அந்நிய பங்கு முதலீடுகளின் மதிப்பு, $23,441 மில்லியன், அதாவது ரூபாய் 174,793 கோடி ஆகும். இதன் மூலம் 2020-21-ம் நிதியாண்டில் செப்டம்பர் வரை இந்தியாவில் செய்யப்பட்ட நேரடி அந்நிய முதலீட்டின் மதிப்பு $30,004 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 15 சதவீதம் அதிகமாகும்.

இந்திய ரூபாய் மதிப்பில் பார்க்கும்போது இது ரூபாய் 224,613 கோடியாகவும் கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 23 சதவீதம் அதிகமாகவும் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்