காரீப் சந்தைக் காலத்தில் நவம்பர்12-ம் தேதி வரையிலான காலகடத்தில் கடந்த ஆண்டை விட 23.28% அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.
பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரபிரதேசம், உத்தரகாண்ட், சண்டிகர், ஜம்மு&காஷ்மீர், குஜராத் மற்றும் கேரளாவில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இங்கு கடந்த 12-ஆம் தேதி வரை 273.35 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதே காலத்தில் 221.73 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.
கடந்தாண்டு இதே ஆண்டு காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதலை விடவும் 23.28% அதிகமாகும். இந்தாண்டில் இது வரையிலான 273.35 லட்சம் மெட்ரிக் டன் மொத்த கொள்முதலில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 192.04 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த கொள்முதலில் 70.25 % ஆகும்.
நடப்பு காரீப் சந்தை காலத்தில் 23.27 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 51610.20 கோடி பெற்றுள்ளனர்.
கடந்த 12-ம் தேதி வரையில் நோடல் முகமைகளின் வாயிலாக அரசு சார்பில் 58191.40 மெட்ரிக் டன் அளவுக்கு பாசிப்பயறு, உளுத்தம்பருப்பு, நிலக்கடலை மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவை தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த 33932 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த பட்ச ஆதரவு விலையாக ரூ. 312.67 கோடி தரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 21401.24 மெட்ரிக் டன் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பருப்பு மற்றும் எண்ணைய் வித்துகள் கொள்முதல் 171.91% அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
26 mins ago
சினிமா
39 mins ago
விளையாட்டு
45 mins ago
சினிமா
51 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
57 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago