105 புதிய கிளைகள் தொடங்க பந்தன் வங்கி திட்டம்

By செய்திப்பிரிவு

புதிதாக தொடங்கப்பட்ட தனியார் வங்கியான பந்தன் வங்கி அடுத்த ஐந்து மாதங்களில் மேலும் 105 புதிய கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.

2016 மார்ச் மாதத்திற்குள் 628 கிளைகள் துவங்குவதுதான் எங்கள் திட்டம் என அந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் சந்திர சேகர் கோஷ் தெரிவித்து உள்ளார். மேலும் நிரந்தர வைப்புநிதிகளுக்கான வட்டி விகிதம் கவர்ச்சிகரமான வகையில் இருக்கும் போது வாடிக்கையா ளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதன்மூலம் சிறு முதலீட்டாளர்களின் பணம் வங்கிக்குள் வரும் என்றார்.

இந்த வங்கியின் டெபாசிட் வட்டி விகிதம் 8.7 சதவீதம் முதல் 9.3 சதவீதம் வரை உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 23-ஆம் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 523 கிளைகளை துவங்கி யிருக்கிறார்கள்.

அதில் 70 சதவீதம் கிளைகள் கிராமப்புறங்களில் தொடங்கப்பட்டுள்ளது. மாநில அடிப்படையில் மேற்கு வங்காளத்தில் அதிக கிளைகள் உள்ளன. இதற்கடுத்து பிஹார், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் கிளைகள் உள்ளன.

மைக்ரோபைனான்ஸ் நிறுவனமாக செயல்பட்டு வந்த நிறுவனம் இப்போது வங்கியாக மாற்றப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

சினிமா

33 mins ago

தொழில்நுட்பம்

45 mins ago

தமிழகம்

51 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்