நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் இன்று முதல் வெளிவரவுள்ளன. நிறுவ னங்களின் செயல்பாட்டினை பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இன்று இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவு வெளியாக இருக்கிறது. நாளை டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவு வெளியாக உள்ளது. தவிர இந்த வாரத்தில் ரிலையன்ஸ், ஹெச்யூஎல் என பல முக்கியமான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ளன.
மேலும், ஐஐபி குறியீடு, பணவீக்கம் உள்ளிட்ட தகவல்கள் வெளியாக இருப்பதால் இந்த தகவல்களைப் பொறுத்தே இந்த வார சந்தையின் போக்கு இருக்கும். நுகர்வோர் பணவீக்கம் மற்றும் ஐஐபி தகவல்கள் இன்று வெளியாக உள்ளன. அதேபோல வரும் புதன்கிழமை மொத்த விலை குறியீட்டு எண் வெளியாக உள்ளது. கடந்த இரு வாரங்களில் சந்தை 4.70 சதவீதம் அல்லது 1,216 புள்ளிகள் உயர்ந்தது. ஆனால் இந்த வாரத்தில் சர்வதேச நிலவரம், அந்நிய முதலீடு, காலாண்டு முடிவுகளை பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
ரூ. 2,000 கோடி அந்நிய முதலீடு
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்திய சந்தையில் இருந்து அந்நிய முதலீடு வெளியேறிய சூழ்நிலையில் அக்டோபர் மாதத்தில் இதுவரை 2,000 கோடி ரூபாய் வரை அந்நிய முதலீடு வந்திருக்கிறது. இதில் இந்திய பங்குச்சந்தைக்கு 1,607 கோடி ரூபாயும், இந்திய கடன் சந்தைக்கு 406 கோடி ரூபாய் முதலீடும் வந்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 min ago
சுற்றுச்சூழல்
3 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago