குறைந்தபட்ச ஆதரவு விலையில் 2020-21 கரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதலில் அக்டோபர் 18 வரை 7.82 லட்சம் விவசாயிகளிடமிருந்து 90.03 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
2020-21 கரீப் பருவத்திற்குத் தேவையான சந்தைப்படுத்துதல் தொடங்கப்பட்டதையடுத்து கடந்த காலங்களைப் போலவே இந்த வருடமும் அதே குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடமிருந்து அரசு பயிர்களைக் கொள்முதல் செய்கிறது.
பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு-காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நெல் கொள்முதல் சுமுகமாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 18ஆம் தேதி வரை 7.82 லட்சம் விவசாயிகளிடமிருந்து 90.03 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 18ஆம் தேதி வரை அரசு தன் முதன்மை முகமைகளின் மூலம் 5.48 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 761.55 மெட்ரிக் டன் அவரை விதையும், உளுந்தும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த 735 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.
இதேபோல 52.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில், 5089 மெட்ரிக் டன் கொப்பரையைக் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள 3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.
வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தானில் பருத்திக் கொள்முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சுமுகமாக நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 18ஆம் தேதி வரை 46697.86 லட்சம் ரூபாய் மதிப்பில்165369 பேல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 1245 பேல்கள் அதிகமாகும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago