ரூ. 8575 கோடியில் கொல்கத்தா கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், கொல்கத்தா கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மெட்ரோ திட்டத்தின் மொத்த தூரம் 16.6 கிலோமீட்டர், திட்ட மதிப்பீடு ரூபாய் 8575 கோடி ஆகும்.

ரயில்வே அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தா கிழக்கு-மேற்கு மெட்ரோ திட்டப் பணிகளுக்கான தொகையை 8474.98 கோடி ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சால்ட் லேக்கிலிருந்து, ஹவுரா மைதானம் வரை 16.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த ரயில் பாதை அமையவிருக்கிறது. இதற்காக கங்கை நதி மற்றும் ஹவுரா ரயில் நிலையங்களுக்கு அடியில் சுரங்க வழி பாதை தோண்டப்படும். நாட்டிலேயே முதன்முறையாக மிகப்பெரிய நதிக்கு அடியில் போக்குவரத்து சுரங்கப் பாதை தோண்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் பாதை திட்டத்தின் மூலம், பயணிகளின் பயண நேரம் குறைக்கப்படும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும். மேலும் மாசற்ற, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான போக்குவரத்தையும் இந்த திட்டம் உறுதி செய்யும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

சினிமா

19 mins ago

தொழில்நுட்பம்

24 mins ago

இந்தியா

6 mins ago

இந்தியா

13 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்