பெட்ரோலிய நிறுவனங்களால் 188.6 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல்: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

எத்தனால் கலந்த பெட்ரோலுக்காக எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களால் 2018-19-இல் 188.6 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்யப்பட்டது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமான பதில் ஒன்றின் மூலம் மக்களவையில் அளித்தார். அவர் கூறியதாவது:

எத்தனால் கலந்த பெட்ரோலுக்காக எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களால் கடந்த மூன்று வருடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட எத்தனாலின் அளவு பின்வருமாறு:

2016-17-இல் 66.5 கோடி லிட்டர் எத்தனால் வாங்கப்பட்ட நிலையில், 2017-18-இல் 150.5 கோடி லிட்டர் எத்தனாலும், 2018-19-இல் 188.6 கோடி லிட்டர் எத்தனாலும் கொள்முதல் செய்யப்பட்டது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2018-இன் படி, 2030-க்குள் பெட்ரோலில் 20% எத்தனாலை கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

30 mins ago

கல்வி

23 mins ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

26 mins ago

ஓடிடி களம்

33 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்