தங்கத்தின் விலை இன்று இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5301 ஆக உயர்ந்தது
இந்தநிலையில் மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.122 உயர்ந்து ரூ.5324 க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.976 உயர்ந்து ரூ. 42592க்கு விற்பனையாகிறது.
இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 44712 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 6.60 ரூபாய் உயர்ந்து 79.20 ரூபாய் ஆக விற்பனையாகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 mins ago
விளையாட்டு
3 mins ago
தமிழகம்
27 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago