இவரைத் தெரியுமா?- சரங்தர் ஆர் நிர்மல்

By செய்திப்பிரிவு

மஹாராஷ்டிராவின் பிரபாத் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். 1998 ல் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

இதற்கு முன்பு பிரவரா சர்க்கரை ஆலை மற்றும் முக்கிய பொருட்களின் வர்த்தகம் போன்ற பணிகளைச் செய்தவர்.

பழைய காகிதங்கள் மூலம் காகித போர்டுகள் தயாரிக்கும் உற்பத்தியில் ஈடுபட்டவர்.

பால் உற்பத்தித் துறையில் 16 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்டவர்.

உற்பத்திக்கு அடிப்படையாக ஆலைகள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு பணியாளர்கள் முக்கியம் என்பார்.

பங்குதாரர்கள் மற்றும் விவசாயிகளோடு நேரடியாக பழகக் கூடியவர். பண்ணை மற்றும் பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் `பிக் பிரதர்’ என்று பெயரெடுத்தவர்.

இவரது நிறுவனம் தினசரி 15 லட்சம் லிட்டர் பாலை பதப் படுத்துகிறது. பொதுப்பங்கு வெளியீடு மூலம் ரூ. 300 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளார்.

பல்வேறு சேவைகளுக்காக இந்திய அரசிடமிருந்து பல விருது களைப் பெற்றுள்ளார். புணே பல்கலைக்கழகத்தில் இளநிலை வணிகவியல் மற்றும் எம்பிஏ உயர்கல்வி பட்டம் பெற்றவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கார்ட்டூன்

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

22 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்