புதிய முதலீட்டு நிறுவனம்: ஸ்டார்ட்அப்எக்ஸ் வென்ச்சர் தொடக்கம்

By செய்திப்பிரிவு

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மோகன்தாஸ் பாய், பிவி நாயூடு மற்றும் ஜே.ஏ.சவுத்திரி ஆகியோர் இணைந்து புதிதாக ஸ்டார்ட்அப்எக்ஸ் வென்ச்சர் என்னும் முதலீட்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிறுவனம் பாதுகாப்பு, செமி கண்டக்டர் நிறுவனங்களில் முதலீடு செய்யும். இதற்காக 30 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள் ளது.

புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு பல சவால்கள் உள்ளன. அடிப்படை கட்டுமானத்தை உருவாக்குவது, சரியான ஆலோசகர்கள் இல்லா தது, சர்வதேச தொடர்புகள் குறைவாக இருப்பது உள்ளிட்ட பல சவால்கள் ஆரம்ப நிலை| யில் உள்ளன. அந்த சவால் களை குறைப்பதற்காக இந்த நிறுவனத்தை தொடங்கி இருக்கிறோம் என்று நிறுவனர் களில் ஒருவரான பி.வி.நாயுடு தெரிவித்தார்.

சில லட்சங்களில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை புதிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். அடுத்த 18 முதல் 24 மாதங்களில் இந்த தொகை முதலீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

தவிர பெரிய வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் சிறிய நிறுவனங்களுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் கூடுதல் நிதி தேவைப்படும். அப்போது ஒப்பந்தம் போடப்பட்டுள்ள வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களில் இருந்து முதலீட்டை திரட்டிக் கொள்ள முடியும். பாதுகாப்பு சாப்ட்வேர் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள ஷீல்ட்ஸ்கொயர் என்னும் நிறுவனத்தில் முதல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

15 mins ago

இந்தியா

36 mins ago

விளையாட்டு

49 mins ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்