பிரதமர் நிதிக்கு எஸ்பிஐ ஊழியர்கள் 2 நாட்கள் சம்பளம்: மொத்தம் ரூ.100 கோடி வழங்குகின்றனர்

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஊழியர்களின் 2 நாட்கள் சம்பளத்தை வழங்கவுள்ளனர். மொத்தமாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என அந்த வங்கி இன்று அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.

இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினர். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளனர்

குறிப்பாக பெரு நிறுவனங்கள் பலவும் அதிகஅளவில் நிதி வழங்கி வருகின்றன. அந்த வகையில் நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் 2 நாட்கள் சம்பளத்தை வழங்கவுள்ளனர். இந்த வங்கியில் மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகினறனர்.

அவர்களின் 2 நாட்கள் சம்பளத்தின் மூலம் மொத்தமாக 100 கோடி ரூபாய் திரட்டப்படுவுள்ளது. இதன் மூலம் மொத்தமாக 100 கோடி ரூபாய் பிரதமர் நிதிக்கு அனுப்பி வைக்கப்படும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்