கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு 500 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினர். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளனர்
அந்தவகையில் 100 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு 500 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு தலா 5 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இதுபோலவே இன்போசிஸ் நிறுவனமும் 100 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. பிரதமர் நிவாரண நிதிக்கு 50 கோடியும் கரோனா முன்னெச்சரிக்கை பணிகளுக்கு 50 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago