இது வர்த்தகத்துக்கான நேரம் அல்ல; சேவைக்கான நேரம்: கரோனா குறித்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் கருத்து

By செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ், கரோனாவின் பாதிப்பு குறித்தும் அது தொடர்பாக அமேசான்நிறுவனம் மேற்கொண்டு வரும்முயற்சிகள் குறித்த தகவல்களை யும் அவரது ஊழியர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

அமேசான் ஊழியர்களுக்கு அவர் கூறியதாவது: ‘இது வர்த்தகத்துக்கான நேரம் அல்ல. பெரும் அழுத்தமும், நிச்சயமின்மையும் சூழ்ந்துள்ள நேரம். இந்த நேரத்தில் நமது பணி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது. மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் கிடைக்கும் வகையில் அமேசான் நிறுவனம் மிக முக்கியமான பொருட்களை விநியோகிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அதற்கென அதன் லாஜிஸ்ட்டிக் செயல்பாடுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. உலகில் எந்த மூலையில் இருப்பவருக்கும் முக்கிய சேவைகளை வழங்குகிறோம். மிக குறிப்பாக வயதானோருக்கு முக்கிய சேவைகளை வழங்கி வருகிறோம். மக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வருகிறோம்.

உலக அளவில் பல்வேறுநிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தற்போது அமேசானில் 1 லட்சம் புதிய பணிகளுக்கு ஆட்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் தங்கள் பணிக்குத் திரும்பும் வரை அமேசானில் இணைந்து பணியாற்றலாம். உங்கள் பணியை சமூகம் நினைவில் கொள்ளும்’’ என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்