2019-20-ல்  ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5% - தேசிய புள்ளிவிவர அலுவலகம் தகவல்

By பிடிஐ

முந்தைய நிதியாண்டில் 6.8% ஜிடிபி வளர்ச்சி என்ற நிலையில் 2019-20-ல் 5% ஜிடிபி வளர்ச்சி மட்டுமே இருக்கும் என்று அரசுத் தரப்புத் தரவு ஒன்று தெரிவிக்கிறது.

தேசியப் புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள தேசிய வருவாய் பற்றிய கணிப்பு மதிப்பீட்டின்படி உற்பத்தித் துறை வீழ்ச்சியினால் ஜிடிபி வளர்ச்சி மந்தமடைந்துள்ளது, கடந்த நிதியாண்டில் 6.2% ஆக இருந்த உற்பத்தித் துறை வளர்ச்சி 2% ஆகக் குறைந்தது.

வேளாண்மை, கட்டுமானம், மின்சாரம், எரிவாயு, நீர்விநியோகம் ஆகிய துறைகளிலும் வளர்ச்சிக் குறைபாடு இருந்து வருகிறது.

ஆனால் சுரங்கம், பொதுநிர்வாகம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் சற்றே முன்னேற்றம் காணப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

19 mins ago

சினிமா

32 mins ago

விளையாட்டு

38 mins ago

சினிமா

44 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

50 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்