சென்னை
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தைக் கண்ட தங்கத்தின் விலை இன்று ரூ.24 குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.28,880 ஆக விற்பனை செய்யப்படுகிறது
சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் எதிரொலியாலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது.
இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்குப் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கத்தின் விலை அண்மைக்காலமாக உயர்ந்தது.
இதனால் உள்ளூர் ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதற்கிடையே செப்.4-ம் தேதி வரலாற்றில் புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது.
இரு வாரங்கள் முன்பு வரை, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வருகிறதுது. 8 கிராம் கொண்ட ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 24 ரூபாய் குறைந்து ரூ.28 ஆயிரத்து 880 ஆக விற்பனை ஆகி வருகிறது. அதாவது கிராம் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைந்து 3,610 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. அதே போல 8 கிராம் சுத்தத் தங்கம் ரூ.30 ஆயிரத்துக்கு 152-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை அதிகரித்தது
அண்மையில் வெள்ளி விலையிலும் ஏற்ற இறக்கம் தொடர்ந்து ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ளியின் மதிப்பும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து ரூ.51.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளி, ரூ.51,400-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச அளவில் நிலவும் நிலையற்ற தன்மையால், தங்கம் மற்றும் வெள்ளி சந்தையும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
இலக்கியம்
5 hours ago
தமிழகம்
26 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago