தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் 29 ஆயிரத்தை தாண்டியது 

By செய்திப்பிரிவு

சென்னை

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பிற்பகல் நிலவரப்படி ஒரு பவுன் ரூ. 29016 -க்கு விற்கப்படுகிறது.

உலகளாவிய பொருளாதாரச் சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா- சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தகச் சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை அண்மையில் உயர்ந்து வருகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கணிசமாக உயர்ந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி (ஆக.13) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.72 உயர்ந்து, ரூ. 28896-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 3612.00-க்கு விற்பனையானது.

இன்று மாலை நிலவரப்படி ஒரு பவன் தங்கம் விலை மேலும் 120 ரூபாய் அதிகரித்தது. இதனால் ஒரு பவன் தங்கம் 29016 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 3627-க்கு விற்பனையானது. இதனால் தங்கத்தின் விலை இன்று ஒட்டுமொத்தமாக கிராமுக்கு 24 ரூபாயும், பவுனுக்கு 192 ரூபாயும் அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 49 ரூபாயாக விற்பனையாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

40 mins ago

கல்வி

33 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

36 mins ago

ஓடிடி களம்

43 mins ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்