ஏற்றுமதி குறைவால் இந்தியாவின் வளர்ச்சி குறையும்: ஹெச்எஸ்பிசி அறிக்கை

By செய்திப்பிரிவு

ஏற்றுமதி குறைந்து வருவதால், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 0.40 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளது என்று ஹெச்எஸ்பிசி அறிக்கை தெரிவித்துள்ளது. 2015-ம் ஆண்டுக்கான ஏற்றுமதி கணிப்பு குறைவாக உள்ளது. அதேபோல சர்வதேச வளர்ச்சியும் மந்தமாக உள்ளதால் இந்தியாவின் வளர்ச்சி 0.40 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருக்கிறது.

அதேசமயம் உள்நாட்டில் நிலவும் சிக்கல்களை தீர்க்கும் பட்சத்தில் இந்த நிலைமை மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் 2016-ம் ஆண்டு ஏற்றுமதி உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு ஜிடிபியில் 0.70 சதவீதம் வரை ஏற்றம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டின் இறுதியில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 68 டாலர் வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதனால் 2015-16ம் நிதி ஆண்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.5 சதவீதமாக (ஜிடிபியில்) அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஹெச்எஸ்பிசி தெரிவித்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

சினிமா

9 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

13 mins ago

சினிமா

31 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்