சென்னையில் 4-ஜி: ஏர்டெல் அறிமுகம்

By செய்திப்பிரிவு

தொலைத் தொடர்பு சேவையில் முன்னணியில் உள்ள தனியார் நிறுவனமான பார்தி குழுமத்தின் ஏர்டெல் நிறுவனம் 4-ஜி சேவையை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே 3-ஜி சேவையைப் பயன்படுத்தும் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை அளிக்க உள்ளதாக நிறுவனத்தின் (தமிழகம், கேரளம்) தலைமைச் செயல் அதிகாரி ஜார்ஜ் மாதென் தெரிவித்தார்.

சோதனை அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டு, வாடிக்கையா ளர்களிடம் கருத்து கேட்கப்படும். அதனடிப்படையில் சர்வதேச தரத்திலான மேம்பட்ட சேவையை அளிக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

3-ஜி கட்டணத்தில் வாடிக்கை யாளர்கள் 4-ஜி சேவையைப் பெறலாம். இந்த வசதியை அருகில் உள்ள ஏர்டெல் வாடிக் கையாளர் மையத்துக்குச் சென்று பெற முடியும்.

4-ஜி சேவைக்காக பிளிப் கார்ட் மற்றும் சாம்சங் நிறுவனத் துடனும் ஏர்டெல் கூட்டு சேர்ந்துள்ளது. சாம்சங்கின் 4-ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களும், பிளிப்கார்ட் மூலம் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களும் ஏர்டெல் 4-ஜி சிம்கார்டைப் பெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்