$ 69 வயதாகும் மிஸ்ரா பிரதமரின் முதன்மை செயலாளர். கடந்த புதன் கிழமை இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
$ இதற்கு முன்பு தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவராக இருந்து 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். டிராய் விதிப்படி அங்கிருந்து ஓய்வு பெற்றவர்கள் மத்திய மற்றும் மாநில அரசின் உயர் பொறுப்புகளை வகிக்கக் கூடாது என்ற விதி இவருக்காக மாற்றி அமைக்கப்பட்டது.
$ உத்திரப்பிரதேச பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி இவர். 1967-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். உத்திரப்பிரதேச முதல்வர்கள் கல்யாண் சிங் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கு முதன்மை செயலாளராக இருந்தவர்.
$ மேலும் மத்திய அரசிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார். டெலிகாம், வர்த்தம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தில் இருந்திருக்கிறார். வாஷிங்டனில் இருக்கும் இந்திய தூதரகத்திலும் சில காலம் பணிபுரிந்தவர்.
$ உலக வங்கியின் சர்வதேச நிதி மையத்திலும் சில காலம் பணிபுரிந்தவர்.
$ அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் பொதுநிர்வாகமும், வேதியியலும் படித்தவர். ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகப்படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
3 mins ago
இந்தியா
5 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
29 mins ago
இந்தியா
31 mins ago
தமிழகம்
37 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
58 mins ago
தமிழகம்
59 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago