மாக்மா பின்கார்ப் ரூ.500 கோடி நிதி திரட்டியது

By செய்திப்பிரிவு

மாக்மா பின் கார்ப் நிறுவனம் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் மூலம் 500 கோடி ரூபாய் நிதி திரட்டியது. கேகேஆர், இண்டியம் மற்றும் லீப்பிராக் ஆகிய நிறுவனங்கள் முன்னுரிமை பங்குகள் மூலமாக இந்த தொகையை முதலீடு செய்தன.

தொழில் விரிவாக்கப்பணிகளுக்காக இந்த தொகையை பயன்படுத்தப்போவதாக மாக்மா தெரிவித்திருக்கிறது.

இதில் இண்டியம் நிறுவனம் 220 கோடி ரூபாய், லீப்பிராக் நிறுவனம் 200 கோடி ரூபாயும், கேகேஆர் நிறுவனம் 80 கோடி ரூபாயும் முதலீடு செய்தன.

அமெரிக்காவை சேர்ந்த கேகேஆர் நிறுவனம் 2011-ம் ஆண்டே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

4.62 கோடி பங்குகள் (108 ரூபாய்க்கு) இந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை முடிவு விலைகளுடன் ஒப்பிட்டால் இவை 30 சதவீதம் அதிகமாகும்.

இதன் காரணமாக இந்த பங்கு கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து முடிவடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்