இவரைத் தெரியுமா?: குருராஜ் தேஷ் பாண்டே

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பிறந்தவர், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரத்தில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்.

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களில் துணிகர முதலீடு (வெஞ்சர் கேபிடலிஸ்ட்) செய்துள்ளார். தொழில் முனைவோரும் கூட.

மாசசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தில் தேஷ் பாண்டே மையம் உள்ளது. இது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேஷ் பாண்டே அறக்கட்டளையையும் ஏற்படுத்தியுள்ளார்.

மோட்டரோலாவின் துணை நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் கோரல் நெட்வொர்க்ஸ் எனும் நிறுவனத்தை ஏற்படுத்தினார். 2000-ம் ஆண்டில் தேஜாஸ் எனும் தொலைத் தொடர்பு நிறுவனத்தை உருவாக்கினார்.

தற்போது ஸ்பார்டா குழுமத்தின் தலைவராக இருக்கிறார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஏற்படுத்தியுள்ள இன்னொவேஷன் மற்றும் தொழில்முனைவோர் குழுவில் உள்ளார்.

சென்னை ஐஐடி-யில் மின் பொறியியலில் இளங்கலை பட்டமும், கனடாவில் உள்ள குயீன்ஸ் பல்கலையில் டேட்டா கம்யூனிகேஷனில் டாக்டர் பட்டமும் பெற்றவர்.

நியூ பிரன்ஸ்விக் பல்கலையில் மின் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

29 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்