ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் தன் வசமிருந்த நிறுவனத்தின் பங்குகள் (51 சதவீதம்) அனைத்தையும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அடகு வைத்துள்ளார். மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் தாக்கல் செய்த அறிக்கையில் இத்தகவலை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் எவ்வளவு தொகைக்கு அடகு வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு அபுதாபியைச் சேர்ந்த எதியாட் ஏர்வேஸ் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24 சதவீத பங்குகளை ரூ. 2,000 கோடிக்கு வாங்கியது. விமான துறையில் அந்நிய நேரடி முதலீடுகள் அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து எதியாட் ஏர்வேஸ் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் பங்குகளில் முதலீடு செய்ய முடிந்தது. இதற்கு முன்பு வரை பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளிநாட்டு நிறுவனங்கள் விமான போக்குவரத்துத் துறையில் அனுமதிக்கப்படவில்லை.
சமீபத்தில்தான் இந்நிறுவனம் ஒட்டுமொத்த லாபமாக ரூ. 70 கோடியை ஈட்டியிருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ரூ. 891 கோடியை நஷ்டமாக சந்தித்திருந்தது. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு நிறுவனம் லாபம் ஈட்டுவது இதுவே முதல் முறையாகும்.
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
க்ரைம்
3 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
16 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago