பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனத்தின் (என்எம்டிசி) 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முன்னணி பங்கு விற்பனை நிறுவனத்தை நாடியுள்ளது. இந்த பங்கு விற்பனை மூலம் ரூ. 5,500 கோடி திரட்ட முடியும் என அரசு நம்புகிறது.
இந்நிறுவனத்தில் அரசுக்கு 80 சதவீத பங்குகள் உள்ளன. அடுத்த மாதம் கேட்பு விலை விற்பனை (ஓஎப்எஸ்) அடிப்படையில் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பங்கு விற்பனைக்குப் பிறகு அரசின் வசம் 70 சதவீத பங்குகள் இருக்கும்.
பங்கு விற்பனையில் அனுபவமுள்ள முன்னணி வங்கிகள் ஒன்றாகவோ அல்லது குழுவாகவோ பங்கு விற்பனையில் ஈடுபட முன்வரலாம் என்றும் இதற்கான பரிந்துரைகள் இந்நிறுவனங்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் அரசு நிறுவனங்களின் பங்கு விலக்கல் மூலம் ரூ. 43,425 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் செயில் நிறுவனத்தின் 5 சதவீத பங்கு விற்பனை மூலம் ரூ. 1,715 கோடி திரட்டப்பட்டது. நிதி ஆண்டு முடிய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் சாத்தியமான பங்கு விலக்கல் நடவடிக்கையை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
15 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
53 mins ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
3 hours ago