டீசல் மீதான விலைக்கட்டுப் பாட்டை நீக்கியதன் காரணமாக இதுவரை மூடியிருந்த பெட்ரோல் பங்குகளை ரிலையன்ஸ் திறக்க ஆரம்பித்திருக்கிறது.
தன்வசம் இருக்கும் 1,432 பெட்ரோல் பங்குகளில் ஐந்தில் ஒரு பங்கினை ரிலையன்ஸ் திறந்திருக்கிறது.
2008-ம் ஆண்டு மார்ச் மாதம் தன்னிடம் இருக்கும் 1432 பெட்ரோல் பங்குகளை ரிலையன்ஸ் மூடியது. பொதுத் துறை நிறுவனங்கள் மானிய விலையில் டீசலை விற்பதினால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தவிர விற்பனையும் இல்லாமல் இருந்தது.
இப்போது விலைக் கட்டுப்பாட்டை நீக்கி இருப்பதன் மூலம் 230 பெட்ரோல் பங்குகளை மீண்டும் திறந்துள்ளது. மீதமுள்ள பெட்ரோல் பங்குகள் ஒரு வருடத்துக்குள் திறக்கப்படும் என்றும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
இந்தியாவில் ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் ஆகிய தனியார் நிறுவனங்கள் மட்டுமே பெட்ரோல் பங்க் நிலையங்களை வைத்துள்ளன.
2010-ம் ஆண்டு பெட்ரோல் மீதான விலைக்கட்டுப்பாட்டை நீக்கிய பிறகு எஸ்ஸார் நிறுவனம் தன்னுடைய பங்குகளில் பெட் ரோல் விற்பனையை ஆரம் பித்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
க்ரைம்
3 hours ago