பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி மீண்டும் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி அதிகரித்து, மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இருப்பினும், பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை உயர்த்தியுள்ளதால், சில்லறை விற்பனை விலை உயராது என அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை சரிந்துவரும் நிலையில், பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை உயர்த்துவதால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிட்டும் எனவும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வாரங்களில் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி அதிகரிப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.2.25, டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரத்தையொட்டி, காரணமாக, திங்கள் கிழமை பெட்ரோல் விலையை லிட்டருக்கு 91 காசுகள் வரையும், டீசல் விலையை லிட்டருக்கு 84 காசுகள் வரையும் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

தமிழகம்

50 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்